• home
  • about
    • About Us
    • News
    • Executive Committee
    • Past Executive Committee Members
    • Membership Application Form
  • services
    • services - சேவைகள்
    • Projects - திட்டங்கள்
  • gallery
  • Literature
    • Short Story - சிறுகதை
    • Daram - நாடகம்
    • Poem - கவிதை
    • Social - சமூகம்
    • History - வரலாறு
    • Classical Tamil Literature - பண்டைத் தமிழ் இலக்கியம்
    • Tamil Intellectuals - தமிழ் அறிவுஜீவிகள்
  • Other
    • Festivals - பண்டிகைகள் 
    • Painting - ஓவியம் 
    • Music - சங்கீதம் 
    • Dance - நடனம்
    • Classical Photos - அபூர்வ புகைப்படங்கள்
    • Classical Recordings - அபூர்வ ஒலிப்பதிவுகள்
    • Cinema - சினிமா
HomeLiterature Dramasமண் சுமந்த மேனியர்

மண் சுமந்த மேனியர்

குழந்தை ம. சண்முகலிங்கம்

குழந்தை ம. சண்முகலிங்கம்
குழந்தை ம. சண்முகலிங்கம் ஈழத்தின் நாடக எழுத்தாளர், நாடகப் பயிற்சியாளர், நாடக நடிகர். இவர் நாடகத்துறைக்கான பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று முப்பது ஆண்டு காலமாக அதே பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

இவர் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில நூலுருவிலும் வந்திருக்கின்றன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், இப்சன், அன்ரன்-செக்கோவ், பேட்டல்-பிரக்சட், தாகூர் ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில யப்பானிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1970களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஒன்றினை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். இந்தப் பணி மூலமாக யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே காத்திரமான நாடகத்துறை ஒன்று உருவாக இவர் காரணமாக இருந்திருக்கின்றார்.

1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்திய இவர் ராணுவ அடக்குமுறை பெண்களுக்கெதிரான அடக்குமுறை மாணவர்களை அடக்கிய கல்வி அடக்குமுறை சாதிய அடக்குமுறை சமூகத்தின் போலித்தனங்கள் என்பவற்றையெல்லாம் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இவர் எழுதி இயக்கிய ‘மண் சுமந்த மேனியர்” என்ற நாடகம் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெல்லாம் மேடையேற்றப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இவரது ஏனைய நாடகங்களான ‘அன்னை இட்ட தீ” ‘எந்தையும் தாயும்” ஆகிய நாடகங்களும் மிகவும் பிரபல்யம் ஆனவை. 1976 ஆம் ஆண்டில் வெளியான பொன்மணி இலங்கைத் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

ஈழத்தின் சிறுவர் நாடகத்தின் முன்னோடியான இவர் சிறுவர் நாடகங்களையும், பாடசாலை நாடகங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். நாடகத்துறைக்கு இவர் ஆற்றிவரும் பணிக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கியிருந்தது.

Canberra Tamil Assocaition Copyright © Canberra Tamil Assocition 2018 - 2024 .All rights reserved.
கான்பெரா தமிழ்ச் சங்கம்
P.O. BOX 44
Civic Square,
ACT 2608
Australia
E-mail: cta1983@hotmail.com.au
website templates